- கோஹ்லி
- சல்மான்பாட்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
- சல்மான் பட்
- இங்கிலாந்து
- ஆஷஸ் டெஸ்ட்
- ஆஸ்திரேலியா
- தின மலர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான்பட் தனது யூ டியூப் சேனலில் கூறியிருப்பதாவது: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி எதிரணிக்கு சவால் விடும் மனப்பான்மை கொண்டவர், ஆஸ்திரேலிய சூழ்நிலையில் ஒரு வீரர் செயல்பட அவரது பேட்டிங்கில் ஆக்ரோஷமான எண்ணம் மிகவும் முக்கியமானது. ஆக்ரோஷம், அணுகுமுறை மற்றும் எதிரணிக்கு எதிரான அணுகுமுறை ஆகியவற்றில் ஜோ ரூட்டை விட கோஹ்லி மைல்களுக்கு முன்னால் இருக்கிறார். போராடும் போது ரூட் பதற்றமாக இருந்தார், அதை விராட்டின் முகத்தில் நாம் பார்க்கவே முடியாது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் ரூட்டை விட விராட்டின் உடல் மொழி மற்றும் தீவிரம் மிகவும் சிறப்பாக உள்ளது என்றார்….
The post கோஹ்லி எதிரணிக்கு சவால்விடும் மனப்பான்மை கொண்டவர்; சல்மான்பட் appeared first on Dinakaran.